மின்சார வாகனங்களுக்கான உட்கட்டமைப்புகளை மேம்படுத்த நடவடிக்கை இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும், அவற்றுக்கான சார்ஜிங் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளைத் தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது. பிஎச்இஎல் இணையதளத் (BHEL portal) தரவுகளின்படி, தற்போது நாடு முழுவதும் 52,718 பொது சார்ஜிங் நிலையங்கள் (Public Charging Stations) செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 16,561 நிலையங்களில் கார்களுக்கான அதிவேக சார்ஜிங் வசதிகள் (Fast EV Chargers) அமைக்கப்பட்டுள்ளன. மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவோருக்கு ஏற்படும் 'சார்ஜ் தீர்ந்துவிடுமோ' என்ற அச்சத்தைப் போக்க, ஃபேம்-II (FAME-II) திட்டத்தின் கீழ் ரூ.912.50 கோடியும், பிரதமரின் மின்சார வாகன முன்முயற்சி திட்டத்தின் (PM E-DRIVE) கீழ் ரூ.2,000 கோடியும் பொது சார்ஜிங் நிலையங்கள் அமைக்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மேலும், மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை அமைப்பதற்கு எவ்வித தனி நபர் உரிமமும் தேவையில்லை என்பதால், தனியார் முதலீட்டாளர்கள் எளிதாக இதில் ஈடுபட வழிவகை செய்யப்பட்டுள்ளது. மின்சாரப் பேருந்துகள் மற்றும் கார்களின் உற்பத்தியை அதிகரிக்கவும் மத்திய அரசு பெருமளவில் நிதியுதவி அளித்து வருகிறது. பிரதமரின் மின்சார வாகன முன்முயற்சி திட்டத்தின் கீழ் மொத்தம் 14,028 மின்சாரப் பேருந்துகளை இயக்க ரூ.4,391 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, அகமதாபாத், புனே மற்றும் சூராத் ஆகிய 7 முக்கிய நகரங்களுக்கு மட்டும் 13,800 மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2287125®=6&lang=11 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்